அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கருணாநிதியும் உதயசூரியனும்: 1957 துவங்கி அறுபது  ஆண்டுகளாக தொடர்ந்த பந்தம் 

திமுக என்னும் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக உதயசூரியன் சின்னமாக ஒதுக்கப்படுவதற்கு முன்னதாகவே தனது முதல் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் கருணாநிதி போட்டியிட்டுள்ளார்.  

News image
Updated On :8 ஆகஸ்ட் 2018, 10:09 am

DIN

சென்னை: திமுக என்னும் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக உதயசூரியன் சின்னமாக ஒதுக்கப்படுவதற்கு முன்னதாகவே தனது முதல் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் கருணாநிதி போட்டியிட்டுள்ளார்.  

1949-ஆம் ஆண்டு,செப்டம்பர் 18-ம் நாள்,சென்னை,ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவால் திமுக என்னும் இயக்கம் துவக்கப்பட்டது. கட்சி துவங்கி மூன்று ஆண்டுகளில் பொதுத்தேர்தல் வந்தாலும் திமுக அதில் பங்குபெறவில்லை. பின்னர் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்துக்கு ஏற்ப 1957-ல் அண்ணா தலைமையில் தி.மு.க. முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்தது.

இந்த தேர்தலில் தி.மு.க., தான் போட்டியிட்ட தொகுதிகளில் பல சின்னங்களில் போட்டியிட்டது. இதில் அதிகமான இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. அறிஞர் அண்ணாவும் சேவல் சின்னத்தில்தான்  போட்டியிட்டார். குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதிக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. இத்தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8, 296 வாக்குகள் அதிகம்பெற்று கருணாநிதி வெற்றிபெற்றார். முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் திமுக காலடி எடுத்து வைத்தது  

பின்னர் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து முறையான அங்கீகாரம் கிடைத்த பிறகுதான் தி.மு.க-வுக்கு உதயசூரியன் சின்னம் நிரந்தரமாக கிடைத்தது. இஅதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக இதே சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. இந்தியாவிலேயே ஒரே சின்னத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பது தி.மு.க. மட்டுமே என்பதுகுறிப்பிடத்தக்கது.

கருணாநிதியின் இந்த சாதனை குறித்து கருணாநிதியின் சட்டப்பேரவை பொன்விழா கொண்டாட்ட சமயத்தில் 2017-ஆம் ஆண்டு, ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

“சட்டமன்றத் தேர்தல் களத்தில் 13 முறை போட்டியிட்டவர். 13 முறையும் வெற்றியைத் தவிர வேறெதையும் எதிர்கொள்ளாதவர். அத்தனை தேர்தல்களிலும் அண்ணா கண்ட ஒரே இயக்கம், அண்ணா தந்த ஒரே சின்னம் என தி.மு.கழகத்தையும் உதயசூரியனையும் வரலாற்று அடையாளங்களாகக் கொண்டு களம் கண்டு வெற்றிகளைக் குவித்தவர். இந்தப் பெருமை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறெந்த அரசியல் தலைவருக்கும் கிடையாது என்பது தனிச் சிறப்பு.”

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.