வலிப்பு மற்றும் மூளை பாதிப்படைந்த சிறுவனை கருணைக் கொலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுவனின் நோய் குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் குழுவை அமைக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடலூரைச் சேர்ந்த திருமேனி தாக்கல் செய்த மனுவில், தையல் தொழிலாளியான எனக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டில் பிறந்த எனது மகனால் பேச முடியாது. பத்து வயதான எனது மகனுக்கு பல்வேறு குழந்தைகள் நல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை அளித்தும், எந்தப் பயனும் இல்லை. அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் என் மகனைக் குணப்படுத்த முடியாது எனத் தெரிவித்துவிட்டனர். இதனால் குடும்பத்தினர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எனது மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.கிருôபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மகனின் நோய் குறித்து ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








