கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்குவது நிறுத்தம்

சு இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:49 pm

DIN

அரசு இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் அரசு இ-சேவை மையங்களில் அசல் நிரந்தர ஆதார் அட்டைக்கு மாற்றாக பிளாஸ்டிக் ஆதார் அட்டை ரூ.30 கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை அச்சிட்டு வழங்குவதை பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் தடை செய்துள்ளது. எனவே, அரசு இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை நிறுத்தப்படுகிறது. மேலும், இம்மையங்கள் பொதுமக்களின் ஆதார் அட்டையின் நகலை முழு தாளில் ரூ.12-க்கு அச்சிட்டு வழங்கி வருகிறது. இச்சேவை தொடரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.