மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: 2019 ஜனவரி முதல் தமிழகத்தில் அமல்

தமிழகத்தில் மக்காத பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 11:11 pm

DIN

தமிழகத்தில் மக்காத பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தத் தடை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி, பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தேநீர்-தண்ணீர் கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது.
சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி படித்தளித்த அறிக்கை:
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுநர் குழுவை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்.
அரசுக்குப் பரிந்துரைகள்: தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழு, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்ற பொருள்களைத் தடை செய்யவும் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் வாழை இழைகள், பாக்குமட்டைத் தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியது.
எந்தப் பொருள்களுக்கு விலக்கு? அன்றாடம் பயன்படுத்தப்படும் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருள்களுக்கான உறைகள் போன்ற பொருள்களுக்கான பிளாஸ்டிக் உறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், தேநீர் மற்றும் தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியன தடை செய்யப்படுகிறது.
ஜனவரி 1 முதல் அமல்: பொது மக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருள்களைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ள வசதியாக, இந்தத் தடை உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்கள்
பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், தேநீர் மற்றும் தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள்.

எவற்றுக்கு விலக்கு?
பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருள்களுக்கான உறைகள் போன்ற பொருள்களுக்கான பிளாஸ்டிக் உறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.