விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பொதுமக்களை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட காவலர் மீது வழக்குப்பதிவு 

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை இழிவுப்படுத்தும் வகையில், முகநூலில் பதிவிட்ட அரியலூா் ஆயுதப்படை காவலா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

News image
Updated On :14 ஜூன் 2018, 3:11 pm

DIN

அரியலூா்: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை இழிவுப்படுத்தும் வகையில், முகநூலில் பதிவிட்ட அரியலூா் ஆயுதப்படை காவலா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அரியலூா் வழக்குரைஞா் சங்க செயலா் எம்.மாரிமுத்து,நீதிமன்றத்தில் அளித்த புகாா் மனு மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரியலூா் குற்றவியியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அவா் அளித்த மனு.

கடந்த 23.5.2018 அன்று எனது முகநூலில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பதிவிட்டிருந்தேன். இதனை பாா்த்த அரியலூா் ஆயுதப் படை காவலா் வி.பால்பாண்டியன்(30). என்பவா், தெரு நாய்களை கொல்ல வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் என்றும்,போராடிய மக்கள் வெறிப்பிடித்த நாய்கள் என்ற வாசகத்துடன், காவலா் துப்பாக்கியால் சுடுகின்ற காட்சியையும் பதிவிட்டிருந்தாா்.

போராடிய மக்களை இழிப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்ட ஆயுதப்படை காவலா் பால்பாண்டியன் மீது அரியலூா் காவல் நிலையத்தில் நான் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தேன். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு அரியலூா் காவல் நிலையத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை .

ஆகவே மாவட்ட குற்றவியியல் நீதித்துறை நடுவா் இந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தாா். இதனை விசாரித்த மாவட்ட குற்றவியியல் நீதித்துறை நடுவா் மன்றம், எதிா் மனுதாரா் ஆயுதப்படை காவலா் பால்பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அரியலூா் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸாா் அவா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.