காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க முடியாது என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் 'உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி, ஆறு வார காலத்துக்குள் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க இயலாது' என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சால், மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.
உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருந்தால், தமிழகத்துக்கான தண்ணீர் பிரச்னை ஓரளவு இருந்திருக்காது. தற்போதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தாமதம் செய்தால், சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.