ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

எட்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் கூறினாரா? ஓ. பன்னீர்செல்வம் விளக்கம்

நான்கோ, எட்டோ என்று கூறவில்லை, 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் முதல்வர் கூறினார் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

News image
Updated On :5 நவம்பர் 2018, 11:13 am IST


சென்னை: நான்கோ, எட்டோ என்று கூறவில்லை, 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் முதல்வர் கூறினார் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது, திமுக தலைவர் ஸ்டாலினும் டிடிவி தினகரனும் பல முறை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வந்துள்ளன. 20 தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும் என்பதால் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அவர்களும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர் என்று கூறினார்.

20 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத் தேர்தலில் நிச்சயம் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், குறைந்தது 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என்று அதிமுக கூட்டத்தில் முதல்வர் கூறியதாக தகவல் வெளியானது குறித்து கேட்டதற்கு, நான்கோ, எட்டோ என்று கூறவில்லை, 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் முதல்வர் கூறினார். எந்த சூழ்நிலையிலும் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் முதல்வர் பழனிசாமி அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், பிரிந்து சென்றவர்களை அழைப்பது எங்களது பெருந்தன்மை. அழைப்பை ஏற்பதும், ஏற்காததும் அவர்களது மனநிலை. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

அதிமுகவில் இருக்கும் ஸ்லீப்பர் செல் கடம்பூர் ராஜூ என்று முன்னாள் எம்எல்ஏ கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.