நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர தகுதிச்சான்று: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர, 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர, 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தாமரைச்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "எனது பள்ளிப்படிப்பை தமிழகத்தில் முடித்து, மருத்துவப் படிப்பை வெளிநாட்டில் படித்துள்ளேன். தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மேற்கொள்ளவும், தமிழக மருத்துவக் கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யவும் தன்னை அனுமதிக்க வேண்டும்' என கோரியிருந்தார். 
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, "இந்தியாவில் 90 சதவீத மதிப்பெண் பெற்றவர்களே மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை இருந்து வருகிறது. இந்தச் சூழலில் பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் கூட, அதிகமான தொகையை செலவழித்து வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்கின்றனர். எனவே, வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர, பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று  வழங்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தார். 
இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவு சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலக் தடை விதித்தனர். மேலும் இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 17 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.