இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர தகுதிச்சான்று: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர, 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

Published On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர, 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தாமரைச்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "எனது பள்ளிப்படிப்பை தமிழகத்தில் முடித்து, மருத்துவப் படிப்பை வெளிநாட்டில் படித்துள்ளேன். தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மேற்கொள்ளவும், தமிழக மருத்துவக் கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யவும் தன்னை அனுமதிக்க வேண்டும்' என கோரியிருந்தார். 
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, "இந்தியாவில் 90 சதவீத மதிப்பெண் பெற்றவர்களே மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை இருந்து வருகிறது. இந்தச் சூழலில் பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் கூட, அதிகமான தொகையை செலவழித்து வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்கின்றனர். எனவே, வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர, பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று  வழங்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தார். 
இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவு சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலக் தடை விதித்தனர். மேலும் இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 17 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.