மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை; டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2018, 6:56 am

DIN


சென்னை: குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,  தென் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் மாலத்தீவுப் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி  நிலவுகிறது.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை,  தென் தமிழகத்தில் பரவலாகவும், வடதமிழகத்தில் ஒரு சில  இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.

கன மழையைப் பொறுத்தவரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும்  புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 10 செ.மீ. மழையும், சிதம்பரம், சீர்காழியில் 6 செ.மீ. மழையும், சேத்தியாதோப்பு, மயிலாடுதுறையில் 5 செ.மீ. மழையும், காட்டுமன்னார்கோவில், திருவிடைமருதூரில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.


குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இருக்காது. கிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வடக்கு நோக்கி சற்று நகர்ந்தால் தான் வட தமிழகப் பகுதிகளில் மழை பெய்யும். இல்லையென்றால் தென் தமிழகப் பகுதிகளுக்கே மழை வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார்.

அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் பெய்திருக்கும் மழையின் அளவான 31 செ.மீ. இந்த காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 35 செ.மீ. இது 15 சதவீதம் குறைவு. இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.