மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 30 பேர் கொண்ட இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப்படையினர் முதல்முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் இன்று வியாழக்கிழமை (ஜனவரி 17) நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், விழாக் குழுவினரும் செய்து வருகின்றனர். பார்வையாளர் மாடம், காளைகள் வெளியேறும் பகுதிகளில் தேங்காய் நார் பரப்புவது, காளைகள் சேகரிப்பு மையம், சுகாதாரத் துறை, கால்நடை மருத்துவத் துறை சார்பில் அமைக்கப்படும் மருத்துவ முகாம்கள் ஆகியவற்றுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு அனுமதிச் சீட்டுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. ஏற்கெனவே அந்தந்த பகுதி கால்நடை மருத்துவர்களால் காளைகளுக்கு உடல்தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளை உரிமையாளர்கள் தங்களது காளைகளைப் பதிவு செய்து அனுமதிச் சீட்டு பெற்றுள்ளனர். மொத்தம் 1,400 காளைகளுக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, மாடுபிடி வீரர்கள் 848 பேருக்கு அனுமதிச் சீட்டு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளன்று மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும்.
வாடிப்பட்டி வட்டாட்சியர் வி.பார்த்திபன் தலைமையில் வருவாய்த் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, காவல் துறையினர் ஒருங்கிணைந்து அனுமதிச் சீட்டு வழங்கும் பணியில் ஈடுட்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். வாடிவாசல் பகுதி, மருத்துவ முகாம்கள் அமைக்கும் இடம், காளைகள் சேகரிக்கும் இடம், பார்வையாளர் மாடம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினர்.
இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 30 பேர் கொண்ட இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப்படையினர் முதல்முறையாக பாதுகப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.
இன்று சற்று நேரத்தில் தொடங்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க உள்ள மாடுபிடி வீரர்ரகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை இன்னும் சற்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு, பகலாக சுத்தம் செய்யும் பணி! ஜந்தர் மந்தரில் 60 டன் குப்பைகள்!

பிறந்த மாதத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருக்கா? | அறிவியல் ஆயிரம்

நெட்பிளிக்ஸில் முதல் இடம் பிடித்த கான் சிட்டி திரைப்படம்!

அந்த ஒருவரால் நாடு சீரழிந்தது... பதிவைப் பகிர்ந்த நடிகை ஜோதிகா!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



