இதற்கு கிராமப்புற மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, கரோனா நோய் பரவலை தடுக்க முககவசம், கையுறை அணிந்து கொள்ளுதல். சமூக விலகளை கடைப்பிடித்தல், சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவுதல், வீடுகளிலேயே தனித்து இருத்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது. இந்நோய் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் அரசும் தன்னார்வ அமைப்புகளும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.