மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊத்தங்கரையில் தெருநாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் பலி, 17 ஆடுகள் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அம்பேத்கர் நகரில் அலுமேலு (35)க/பெ சிவலிங்கம் வசித்து வருகிறார். இவரது தொழில் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைத்து வந்தனர். 

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 3:41 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அம்பேத்கர் நகரில் அலுமேலு (35)க/பெ சிவலிங்கம் வசித்து வருகிறார். இவரது தொழில் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைத்து வந்தனர். 

ஆட்டு கொட்டகை வீட்டின் அருகே அமைத்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் இரவு அதிகாலை நேரத்தில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்த போது 15 ஆடுகள் உடலில், கழுத்து, வயிறு போன்ற பகுதிகளில் குடல்கள் வெளியே வந்த நிலையில் பரிதாபகமாக இறந்து கிடந்தது. மேலும் 16 ஆடுகள் குடல்கள் தொங்கிய நிலையிலும், ரத்தம் சொட்ட சொட்ட குத்து உயிருமாக உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது. 

உடனே பொதுமக்கள் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த கால்நடை மருத்துவர் மகேந்திரன் பார்வையிட்டு ஆடுகளை தெரு நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழிந்தது தெரிய வந்துள்ளது. ஆடுகளை வாழ்வதரமாக கொண்டுள்ள அலுமேலு குடும்பத்தார் ஆடுகள் இறந்ததை பார்த்து நெஞ்சை அடித்தக் கொண்டு அழுதார். 

தமிழக அரசு இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.