மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எலி வேட்டைக்கு சென்ற நபர் மின்வேலியில் சிக்கி பலி

மத்தூர் அருகே எலி வேட்டைக்கு சென்ற நபர் மின்வேலியில் சிக்கி பலியானார். 

News image
கோப்புப் படம்
Updated On :27 ஏப்ரல் 2020, 3:57 am

DIN

மத்தூர் அருகே எலி வேட்டைக்கு சென்ற நபர் மின்வேலியில் சிக்கி பலியானார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கே. எட்டிப்பாடி கிராமத்தை சேர்ந்த சதாசிவம் (26), தனது நண்பர்கள் ஆறு பேருடன் சேர்ந்து ஒரு குழுவாக ஞாயிற்றுக்கிழமை இரவு எலி வேட்டைக்குச் சென்றனர்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (52), சபரி (27) ஆகியோரின் பாகற்காய் தோட்டத்திற்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கினர். இதில் சதாசிவம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

நண்பர்கள் அன்பழகன் கோபாலகிருஷ்ணன் விக்னேஷ் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.