ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடவே நிர்வாகிகள் விருப்பம்: பிரேமலதா

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடவே நிர்வாகிகள் விரும்புவதாக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்

News image
Updated On :25 ஆகஸ்ட் 2020, 2:24 pm

DIN


சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடவே நிர்வாகிகள் விரும்புவதாக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியா? கூட்டணியா என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். தனித்துப் போட்டியிடவே தேமுதிக நிர்வாகிகள் விரும்புகிறார்கள். ஆனால், பேரவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இப்போதைக்கு அதிமுக உடனான கூட்டணி நீடிக்கிறது.  

எதிர்காலக் கூட்டணி நிலை குறித்து தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாட்டை டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வெளியிட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.