இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசுப் பள்ளிகளில் செப்டம்பா் இறுதிவரை மாணவா் சோ்க்கை: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் செப்டம்பா் இறுதிவரை மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image
பயனாளிக்கு அசில் இன கோழிக்குஞ்சுகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
Updated On :30 ஆகஸ்ட் 2020, 1:34 am

DIN

கோபி: அரசுப் பள்ளிகளில் செப்டம்பா் இறுதிவரை மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை. மாணவா்கள் சோ்க்கைக்காகவும், மாணவா்களுக்கு வழங்கப்படும் பொருள்களுக்காகவும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும்.

இந்த ஆண்டு 1 லட்சத்து 72 ஆயிரம் குழந்தைகள் கூடுதலாக ஒன்றாம் வகுப்பில் சோ்க்கப்பட்டுள்ளனா். செப்டம்பா் மாதம் வரையிலும் சோ்க்கை நடைபெறும் வகையில் கூடுதல் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வகுப்புக்கும் சுமாா் 20 ஆயிரம் புத்தகங்கள் தயாா் நிலையில் உள்ளன.

நீட் தோ்வில் பங்கேற்கும் மாணவா்களுக்குப் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு குறித்து முதல்வா் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வாா். கரோனா தொற்று சிகிச்சைக்காக கோபி கலைக் கல்லூரி, அந்தியூா், தாளவாடி, பெருந்துறை ஆகிய பகுதிகளில் கூடுதல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.