இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அய்யாக்கண்ணு தலைமையில் தில்லி புறப்பட்ட100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் கைது

அய்யாக்கண்ணு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் வியாழக்கிழமை கைது செய்ய்பட்டனர்.

News image
அய்யாக்கண்ணு தலைமையில் தில்லி புறப்பட்ட100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் கைது
Updated On :3 டிசம்பர் 2020, 6:11 am

DIN

திருச்சி: புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடவும், ஏற்கெனவே தாங்கள் அறிவித்தபடி அமித்ஷா வீட்டு முன் போராடச் சென்ற அய்யாக்கண்ணு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் வியாழக்கிழமை கைது செய்ய்பட்டனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பர் மாத இறுதியில் புதுதில்லி சென்று அமித்ஷா வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. இதற்காக, கடந்த மாதம் 24 ஆம் தேதி புதுதில்லி புறப்பட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை போலீசார் கைது செய்து தில்லி பயணத்தை தடை செய்தனர். 

இந்த சூழலில், மீண்டும் 2ஆவது முறையாக அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாழக்கிழமை புதுதில்லிக்கு புறப்பட ஆயத்தமாகினர்.

அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி பின்னர், திரளாக திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்திலேயே விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தடையை மீறி செல்வதாகக் கூறி விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜங்ஷன் பகுதியில் உள்ள திருமண மஹாலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தால், ரயில் நிலையத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.