இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருச்சியில் தொடரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சாரசரியாக 46.82 மி.மீ. மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3  நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News image
திருச்சியில் தொடரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Updated On :4 டிசம்பர் 2020, 7:50 am

DIN

திருச்சி:  திருச்சி மாவட்டத்தில் கடந்த 3  நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் சராசரியாக 46.82 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் புரெவி புயல் எச்சரிக்கை அறிவிப்பைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த 3  நாள்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமையின் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையும் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், மழையில் சிரமத்துக்கிடையே  தனியார் நிறுவன பணியாளர்களும் அவசரம், அவரசமாக தங்கள் பணியிடங்களுக்கு மழையில் நனைந்தபடியே விரைந்து சென்றனர்.

Story image

மழை காரணமாக, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகர், அண்ணா நகர், உழவர் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூர், வயலூர், புத்தூர், கரூர் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருந்தன. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். லேசாகவும், தூறலாகவும், கனமழையாகவும் மழை பெய்த வண்ணம் இருந்தது. 

தொடர் மழையால் சாலைகளில் ஆங்காங்கே ஜல்லிகற்கள் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட நேரிட்டது. 

இடைவிடாது பெய்த மழை காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியிருக்க நேரிட்டது. வணிக வளாகங்களிலும் மக்கள் கூட்டத்தை காணமுடியவில்லை. அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது. 

Story image

இந்த மழையானது திருச்சி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்திருந்தாலும், மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் கோடையில் குடிநீர்த்தட்டுப்பாடு இருக்காது என உள்ளாட்சி நிர்வாகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ):

கல்லக்குடி-  83.4, லால்குடி- 54.2, நந்தியாறு தலைப்பு- 120.8, புள்ளம்பாடி-  79.80, சிறுகுடி- 33 தேவிமங்கலம்- 34, சமயபுரம் 77.6, வாத்தலை அணைக்கட்டு 31, மணப்பாறை 35.4, பொன்னையாறு அணை-  62.6, கோவில்பட்டி 31.4, மருங்காபுரி- 51.4, முசிறி- 27.8, புலிவலம்- 20,  தா. பேட்டை- 32, நவலூர் கொட்டப்பட்டு-  36, துவாக்குடி- 74, குப்பம்பட்டி- 22, துறையூர்- 51, பொன்மலை- 39.8,  திருச்சி விமானநிலையம் 39.5, திருச்சி ஜங்ஷன்-  48.2, திருச்சி மாநகரம் 65 மி.மீ. என மாவட்டம் முழுவதும் சேர்த்து மொத்தமாக 1170.5 மி.மீ. மழை பெய்தது. சராசரியாக 46.82 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.