இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விழுப்புரம் மாவட்டத்தில் இரு தினங்களாக மீண்டும் கொட்டித் தீர்க்கும் மழை

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் இரு தினங்கள் பலத்த மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து புரவி புயல் காரணமாக புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை வரை பரவலாக மழை பெய்து வ

News image
விழுப்புரம் மாவட்டத்தில் இரு தினங்களாக மீண்டும் கொட்டித் தீர்க்கும் மழை
Updated On :4 டிசம்பர் 2020, 3:49 am

DIN


விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் இரு தினங்கள் பலத்த மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து புரவி புயல் காரணமாக புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை வரை பரவலாக மழை பெய்து வந்தது

தொடர்ச்சியாக மீண்டும் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை வரை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, திண்டிவனம், விழுப்புரம், கண்டமங்கலம், வளவனூர் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. 

வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை:

திண்டிவனத்தில் 143 மிமீ, வளவனூரில் 109 மிமீ, முண்டியம்பாக்கம் 90, விழுப்புரத்தில் 92, செஞ்சியில் 85, வள்ளத்தில் 92, மரக்காணத்தில் 88, வானரில் 82, கஞ்சனூர் 82, செஞ்சி 85, முகையூர் 89, திருவெண்ணநல்லூர் 33, என மொத்தம் மாவட்டம் முழுவதும் சராசரியாக 78.5 மில்லிமீட்டர் அளவில் மழை பதிவாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விழுப்புரம் பேருந்து நிலையம், இந்திரா நகர், ரயில்வே பாலம் மற்றும் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.