யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாரத் பந்த்: தமிழக விவசாய, வணிக அமைப்புகளுக்கு திமுக, கூட்டணி கட்சிகள் அழைப்பு

டிச. 8 ஆம் தேதி நடைபெறும் 'பாரத் பந்த்' தில் கலந்துகொள்ள தமிழக விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்களுக்கு திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. 

News image
தில்லியில் விவசாயிகள் போராட்டம்
Updated On :6 டிசம்பர் 2020, 7:36 am

DIN

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக டிச. 8 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய ‘பாரத் பந்த்'துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்களுக்கு திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிச. 8 ஆம் தேதி, இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நாடு தழுவிய ‘பாரத் பந்த்' முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளது. 

இதில், தமிழக விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், சமூகநல அமைப்புகள், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக எதிர்க்கட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. 

'விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாக்க, தமிழத்தில் இருந்து கிளம்பும் இந்த ஆதரவுக் குரல் அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு எழுச்சிக் குரலாக, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத்  துணை நிற்கும் குரலாக இருக்கட்டும்

னைத்துத் தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து, 'பாரத் பந்த்'தை வெற்றி பெறச் செய்திட  வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்' என்று அனைத்துக்கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் தொடர்ந்து 11 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.