சண்முகாநதி நீர்த் தேக்கத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு
சண்முகாநதி நீர்த் தேக்கத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு

சண்முகாநதி நீர்த் தேக்கத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன் பட்டி சண்முகா நதி நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது.
Published on

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன் பட்டி சண்முகா நதி நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது.

ராயப்பன்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகா நதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் அணையின் முழு கொள்ளளவான 52.50 அடியே எட்டியது. தற்போது உபரி நீர் வெளியேறி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதனை இடத்தை தமிழக அரசு உத்தரவின்பேரில் செவ்வாய்க்கிழமை சண்முகாநதி அணை நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 14 கனஅடி 50 நாள்களுக்கு பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ .பி .ரவீந்திரநாத் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com