இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

15 ஆண்டுகளுக்குப் பிறகு வாழப்பாடி சின்னாறு நீரோடையில் நீரூற்று: விவசாயிகள் மகிழ்ச்சி 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கோதுமலை வனப்பகுதியில் இருந்து  வரும் சின்னாறு நீரோடையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் வழிந்தோடி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News image
சின்னாறு நீரோடையில் வழிந்தோடி செல்லும் தெளிந்த நீர்.
Updated On :16 டிசம்பர் 2020, 7:47 am

DIN


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கோதுமலை வனப்பகுதியில் இருந்து  வரும் சின்னாறு நீரோடையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் வழிந்தோடி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள கோதுமலை வனப்பகுதியில் இருந்து, மாரியம்மன்புதூர், மேலூர், மன்நாயக்கன்பட்டி, துக்கியாம்பாளையம், வாழப்பாடி பேரூராட்சி வடக்குக்காடு, இந்திராநகர், பெரியசாமிநகர் கிழக்குக்காடு வழியாக வரும் சின்னாறு நீரோடை,  மத்தூர் அருகே பெரியாற்றில்  இணைகிறது.

YouTube video thumbnail

கோதுமலை வனப்பகுதி மற்றும் வழித்தட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் சின்னாறு நீரோடையில், கடந்த 15 ஆண்டுகளாக நீரூற்று ஏற்படவில்லை. மழைக்காலத்தில் மட்டும் அவ்வப்போது மழைநீர் வழிந்தோடி செல்லும். பெரும்பாலான பெரும்பாலான நாள்களில், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீரே தேங்கி கிடந்தது.

Story image

15 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்மட்டம் மேலோங்கிய விவசாயக் கிணற்றை பார்க்கும் சிறுவர்- சிறுமியர்.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக கோதுமலைப் பகுதியில் பெய்த பரவலான மழையால் அப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி, சின்ன ஆற்றில் 3 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வழித்தட பகுதிகளிலும் மழைநீர் வழிந்தோடி ஆற்றில் தேங்கியது. இதனால், வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் இருந்து மத்தூர் வரையிலான ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சின்னாறு நீரோடையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த இரு மாதங்களாக நீரூற்று ஏற்பட்டு தெளிந்த நீர் வழிந்தோடி செல்கிறது. இதனால் சுற்றுப்புற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வாழப்பாடி கிழக்குக்காடு கண்ணன் கூறியதாவது.
15 ஆண்டுகளாக நீர்வரத்தின்றி வறண்டு கிடந்த சின்னாறு நீரோடையில் எதிர்பார்க்காத வகையில், இந்த ஆண்டு நீரூற்று ஏற்பட்டு தெளிந்த நீர் வழிந்தோடி செல்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் நீர்மட்டம் மேலோங்கி விவசாய பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைத்துள்ளது.

நீரோடை தெளிந்த நீரில் குழந்தைகளும், பெரியவர்களும் நீராடி மகிழ்ந்து வருகின்றனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.