இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பயிர்ச் சேதம் குறைந்து மதிப்பீடு: கோட்டூர் வேளாண்மை அலுவலகம் முற்றுகை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சில கிராமங்களில் கோட்டூர் வேளாண்மை அலுவலகத்தை, வெள்ளிக் கிழமை விவசாயிகள் முற்றுகையிட்டனர். 

News image
விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வேளாண்மைத் துறை அலுவலர்கள்.
Updated On :18 டிசம்பர் 2020, 11:51 am

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சில கிராமங்களில் நிகழாண்டு பயிர்க் காப்பீட்டுக்கான, பயிர்ச் சேதம் குறித்துக் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து. சரியான மதிப்பீடு செய்ய வலியுறுத்தி, கோட்டூர் வேளாண்மை அலுவலகத்தை , வெள்ளிக் கிழமை விவசாயிகள் முற்றுகையிட்டனர். 

புரெவி புயல் காரணமாக பெய்த தொடர் மழையால், கோட்டூர் ஒன்றியத்தில் சம்பா,தாளடி நெல் பயிர்கள் சேதமடைந்தது. மீனம்பநல்லூர், கீழப்புத்தூர், சீலத்தநல்லூர், கோவில்களப்பால், பட்டமடையான்களப்பால் ஆகிய கிராமங்களின் பயிர்ச்சேத அளவு குறைத்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளது .

இதுகுறித்து, கோட்டூர் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில், விவசாயிகள் விளக்கம்..

கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை எனக் கூறி.தங்களுக்கும், மற்ற கிராமங்களுக்கு வழங்கும் அதே அளவு சேதத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்டூர் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை, திமுக ஒன்றிய செயலர் பால.ஞானவேல், சிபிஐ ஒன்றிய செயலர் க. மாரிமுத்து தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் மன்னார்குடி உதவிப் பொறியாளர் விஜயக்குமார் , களப்பால் வேளாண்மை அலுவலர் செல்வம்  ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அந்த அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டு உள்ளனர். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.