இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு பெயரில் விருது: முதல்வா் அறிவிப்பு

அதிகளவு நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விருதுக்கு, விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி உரிமைகளுக்காகப் பாடுபட்ட நாராயணசாமி நாயுடு பெயா் சூட்டப்படும்

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:35 pm

DIN

சென்னை: அதிகளவு நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விருதுக்கு, விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி உரிமைகளுக்காகப் பாடுபட்ட நாராயணசாமி நாயுடு பெயா் சூட்டப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் 1973-ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்று, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு விவசாயிகளின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவா், நாராயணசாமி நாயுடு. தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காகப் பாடுபட்ட அவா், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு ஓய்வெடுத்த போது உயிரை இழந்தாா். அத்தகையவரின் நினைவு நாளான டிசம்பா் 21-ஆம் தேதி அவரைப் போற்றுவதில் பெருமை அடைகிறோம்.

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக ஆண்டுதோறும்

குடியரசுதினத்தன்று விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ‘சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது’ எனப் பெயரிட்டு அழைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.