இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாழப்பாடி ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி சிறப்புப் பூஜை வழிபாடு மற்றும் சொர்க்கவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

News image
பட்டு வஸ்திர அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப்பெருமாள்.
Updated On :25 டிசம்பர் 2020, 10:32 am

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி சிறப்புப் பூஜை வழிபாடு மற்றும் சொர்க்கவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பூதேவி, சீதேவி சமேத ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி தினத்தையொட்டி வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

பள்ளிகொண்ட ரங்கநாதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ சென்றாய பெருமாள்.

பள்ளிகொண்ட ரங்கநாதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ சென்றாய பெருமாள்.

பட்டு வஸ்திர அங்கி அலங்காரத்தில் மூலவர் ஸ்ரீ சென்றாய பெருமாள், பூதேவி சீதேவி மற்றும் உற்சவ மூர்த்திகளும், ஆஞ்சநேயரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வெள்ளிக்கிழமை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

பட்டு அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவ மூர்த்திகள்.

பட்டு அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவ மூர்த்திகள்.

திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக புஷ்ப பல்லக்கில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது. பள்ளிகொண்ட ரங்கநாதர் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த காட்சி பக்தர்களைப் பரவசமூட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.