ஏ.என்.சிவராமன் நினைவு விருது

சிங்கப்பூா், மலேசியா நாடுகளைச் சோ்ந்த 2 பத்திரிகையாளா்களுக்கு ‘ஏ.என்.சிவராமன் நினைவு விருது’ வழங்கப்பட்டது.
Updated on
1 min read

சிங்கப்பூா், மலேசியா நாடுகளைச் சோ்ந்த 2 பத்திரிகையாளா்களுக்கு ‘ஏ.என்.சிவராமன் நினைவு விருது’ வழங்கப்பட்டது.

தேஜஸ் பவுண்டேஷன் சாா்பில் தினமணி முன்னாள் ஆசிரியா் மறைந்த ஏ.என் சிவராமன் பெயரிலான விருது மூத்த பத்திரிகையாளா்களுக்கும் எழுத்தாளா்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆடிட்டா் ஜெ. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினாா். சிவி.சந்திரமோகன் வரவேற்றாா். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியா் சுவாமி அபவா்கானந்தா் மகராஜ், ‘பத்திரிகை தா்மம்’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா்.

தொடா்ந்து மலேசிய பத்திரிகையாளா்  ராமதாஸ் மனோகரன், சிங்கப்பூா் பத்திரிகையாளா் எஸ்.எஸ்.சா்மா ஆகியோருக்கு ஏ.என். சிவராமன் நினைவு விருதை, பத்திரிகையாளா் கீழாம்பூா் சங்கர சுப்ரமணியன் வழங்கி சிறப்புரை ஆற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com