தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆனைமலையாறு - நல்லாறு இயக்க 100வது பெயர் பலகை திறப்பு விழா

பல்லடம் அருகேயுள்ள நாத கவுண்டம்பாளையம், கள்ளிப்பாளையம், வடமலை பாளையம், கள்ளி மேட்டுப்பாளையம், வேலப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் ஆனைமலையாறு - நல்லாறு இயக்க பெயர்  பலகை திறப்பு விழா நடைபெற்றது.

News image
பல்லடம் அருகேயுள்ள புத்தரச்சலில் ஆனைமலையாறு - நல்லாறு இயக்க 100வது பெயர் பலகை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் திறந்து வைத்தார்.
Updated On :27 டிசம்பர் 2020, 11:04 am

DIN

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள நாத கவுண்டம்பாளையம், கள்ளிப்பாளையம், வடமலை பாளையம், கள்ளி மேட்டுப்பாளையம், வேலப்ப கவுண்டம்பாளையம், துத்தரிப் பாளையம் பகுதியில் ஆனைமலையாறு - நல்லாறு இயக்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

ஆனைமலையாறு - நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் சார்பில் பல்லடம் அருகேயுள்ள புத்தரச் சலில்  ஆனைமலையாறு - நல்லாறு இயக்க விழிப்புணர்வு 100வது பெயர் பலகையை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் திறந்து வைத்தார் இவ்விழாவிற்கு இயக்க தலைவரும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவருமான என்.எஸ்.பி.வெற்றி தலைமை வகித்து பேசுகையில் இத்திட்டத்தை அரசு நிறைவேற்றினால் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விளக்கி பேசினார். இதில் பி.ஏ.பி.பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கே.பி.மணி, மைனர் தங்கவேல், ஆட்டையாம்பாளையம் ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.