இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

எஸ்எஸ்ஐ வில்சன் வழக்கு: தீவிரவாதி காஜாமைதீன் மனைவிகள் வீடுகளிலிருந்து ஐபேட் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

தீவிரவாதி காஜாமைதீன் மனைவிகள் வீடுகளிலிருந்து ஐபேட் உள்ளிட்ட ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய சோதனையின் முடிவில் பறிமுதல் செய்தனர்.

News image
காயல்பட்டினத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய மொய்தீன் பாத்திமா வீடு
Updated On :24 பிப்ரவரி 2020, 7:23 am

DIN

தீவிரவாதி காஜாமைதீன் மனைவிகள் வீடுகளிலிருந்து ஐபேட் உள்ளிட்ட ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய சோதனையின் முடிவில் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலை முதல் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

வில்சன் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக இந்த வழக்கில் கைதான தவ்பீக், சமீம் உள்பட 4 பேரும் இந்த வீட்டில் தங்கி இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் நெய்வேலியில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடைபெற்று

இதில், கைது செய்யப்பட்ட தீவிரவாதி காஜாமைதீன் மனைவிகளான கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள முதல் மனைவி இந்திரா காந்தி, கொள்ளுமேட்டில் உள்ள மூன்றாவது மனைவி பத்ருன்னிஷா ஆகியோரது வீடுகளிலும் மற்றும் மேல்பட்டாம்பாக்கம் சேர்ந்த ஜாபர் அலி, பரங்கிப்பேட்டை சேர்ந்த அப்துல் சமது ஆகியோரது வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் துணை கண்காணிப்பாளர் சாகுல் ஹமீது தலைமையில் சோதனை நடத்தினர். 

8 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொருவரது வீடுகளிலும் சுமார் 3 மணி நேரம் நடத்திய சோதனையில், லேப்டாப், செல்போன், ஐபேட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.