இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக் குற்றவாளிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரையும் தக்கலை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

News image
Updated On :16 ஜனவரி 2020, 4:37 am

DIN

அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரையும் தக்கலை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், கடந்த 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவரைக் கொலை செய்தது திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (32), கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் (28) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தமிழக, கேரள போலீஸாா் சிறப்பு தனிப்படைகளை அமைத்து தேடப்பட்டு வந்த இருவரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனா்.

வட மாநிலங்களுக்கு தப்பியோடும் வகையில் கா்நாடக மாநிலம், உடுப்பி ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னர், இருவரையும் குமரி மாவட்ட போலீஸாரிடம் கர்நாடக போலீஸார் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், இருவரையும்  போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். இதைத் தொடந்து டி.ஐ.ஜி விசாரணைக்காக  போலீஸார் தக்கலை காவல் நிலையம் கொண்டு சென்றனர். டி.ஐ.ஜி விசாரணைக்குப் பின் இருவரும் இன்று முற்பகல் 11 மணியளவில் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.