ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பயிற்சி மருத்துவர் கைது

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறையில், பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பயிற்சி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News image
பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயிற்சி மருத்துவர்
Updated On :8 ஜூலை 2020, 10:51 am

DIN

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறையில், பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பயிற்சி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் 15 வயது மகள், பத்தாம் வகுப்பு  தேர்ச்சி பெற்ற நிலையில், பதினோராம் வகுப்பில் சேர்ந்து படிப்பதற்கு, பள்ளி திறப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இதற்கிடையே, இவரது வீட்டிற்கு அருகே இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில்,  கடந்த இரு மாதங்களாக பயிற்சி மருத்துவராக பணிபுரிந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த துரூர் கிராமத்தைச் சேர்ந்த, மருத்துவர் மதியழகன் வயது (25) என்பவருடன், பழகி உள்ளார்.

இந்நிலையில், திருமண ஆசைகாட்டி தன்னை பயிற்சி மருத்துவர் பாலியல் தொந்தரவு செய்து விட்டதாக,  இச்சிறுமி கருமந்துறை போலீசில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார்.  இவரது புகாரின்பேரில் கருமந்துறை காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் உதவி ஆய்வாளர் வீரமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பயிற்சி மருத்துவர் மதியழகனை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.

சிறுமியை, மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.