சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தெலங்கானா காட்டும் வழியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தெலங்கானா காட்டும் வழியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திங்கள் இரவு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே #10thPublicExam இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா?
நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் @TelanganaCMO காட்டும் வழியையாவது @CMOTamilNadu பின்பற்ற வேண்டும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.