விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குருவரெட்டியூர் ஊராட்சியில் 116 பேருக்கு கரோனா பரிசோதனை

குருவரெட்டியூர் ஊராட்சியில் கரோனாவால் மூவர் பாதிக்கப்பட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 116 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

News image

கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவினர்.

Updated On :23 ஜூன் 2020, 11:41 am

DIN

பவானியை அடுத்த குருவரெட்டியூர் ஊராட்சியில் கரோனா தொற்றால் மூவர் பாதிக்கப்பட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 116 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த குருவரெட்டியூர், ஆசிரியர் குடியிருப்பு பகுதிக்கு சென்னையிலிருந்து திரும்பிய 54 வயதான கணவர், 46 வயதான மனைவி, 13 வயதான மகள் ஆகியோர் கடந்த 18-ஆம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். மூவருக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குருவரெட்டியூர் ஆசிரியர் குடியிருப்புப் பகுதியில் இரு தெருக்கள் சீல் வைக்கப்பட்டு, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, குருவரெட்டியூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அருள்மணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அப்பகுதியைச் சேர்ந்த 116 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தனர். சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.