யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கால்பந்து, ட்ரீம் ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

ஆந்திரா மற்றும் நேபால் மாநிலத்தில் நடைபெற்ற கால்பந்து, ட்ரீம் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று தங்க கோப்பையை கைப்பற்றி இன்று கோவை திரும்பிய மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரை

News image
Updated On :4 மார்ச் 2020, 6:05 am

DIN

ஆந்திரா மற்றும் நேபால் மாநிலத்தில் நடைபெற்ற கால்பந்து, ட்ரீம் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று தங்க கோப்பையை கைப்பற்றி இன்று கோவை திரும்பிய மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றனர்.

ஆந்திரா மற்றும் நேபாள் மாநிலத்தில் நடந்த கால்பந்து மற்றும் ஸ்கேட்டிங் போட்டி  ஆந்திர மாநிலம் திருப்பதி விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்றது. 19 ஆம் நேஷனல் 7A சைடு ஃபுட்பால் சாம்பியன் ஷிப் விளையாட்டு போட்டியில் ராஜஸ்தான், மணிப்பூர் கர்நாடகா, அஸ்ஸாம் உத்தரகாண்ட், டெல்லி ஹரியானா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பள்ளி  மாணவ மாணவிகள் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இதில் 17 வயதிற்கு உட்பட்ட கால்பந்து போட்டியில் கோவையைச் சேர்ந்த லாரல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபிஷேக், முகமத்இர்பான்,இன்பசகாயராஜ், காரத்திக்ராஜா, இம்மானுவேல்,ஆகிய 5 பேர்கள் தங்க கோப்பையை வென்றனர். மேலும் நேபால் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் எட்டு வயதுக்கு உட்பட்ட பிரிவில் கோவையைச் சேர்ந்த பெங்காலின் பப்ளிக் பள்ளி மாணவி சஞ்சனா தங்கப் பதக்கத்தை வென்றார். 

மேலும் பேட்மிட்டன் போட்டியில் மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்து கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவ மாணவிகள் மற்றும் பள்ளியின் பள்ளியின் நிர்வாகி அபிஷேக் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.