தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும்: சென்னையில் பாதியாக குறைப்பு
தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் இந்த மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், இன்று தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனிடையே, புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் சேவை உட்பட அனைத்து பயணிகள் ரயிலும் மார்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்தது. இதனால், போக்குவரத்து மிகப் பெரிய அளவில் துண்டிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் பயணிகளின் நலன்களைக் கருத்தில்கொண்டு 50 சதவீத மாநகரப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...