இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பவானியில் வாகனச் சோதனையின்போது பிடிபட்ட சூடான் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

பவானியில் வாகனச் சோதனையின்போது பிடிபட்ட சூடான் நாட்டைச் சேர்ந்த இரு மாணவர்களையும், கரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News image
Updated On :25 மார்ச் 2020, 3:32 pm

DIN

பவானியில் வாகனச் சோதனையின்போது பிடிபட்ட சூடான் நாட்டைச் சேர்ந்த இரு மாணவர்களையும், கரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை மீறி பொது இடங்களில் நடமாடுவதைத் தடுக்கும் வகையில் பவானி போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்களிடம் விசாரணை நடத்துவதோடு, உடனடியாக இருப்பிடம் திரும்பும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பவானி காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையில் போலீஸார் பவானி - மேட்டூர் சாலையில்  இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி விசாரித்தனர். இருவரும் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், சித்தோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருவதும் தெரிவந்தது. இவர்களிடம் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர், பவானி வட்டாட்சியர் கு.பெரியசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சந்தேகத்துக்கிடமான வகையில் பிடிபட்ட இரு இளைஞர்களும் பவானி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் வாகனச் சோதனையில் பிடிபட்ட சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.