இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஈரோட்டில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று

ஈரோட்டை சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2020, 10:25 am

DIN

ஈரோட்டை சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்லாந்து நாட்டை சார்ந்த நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுடைய ரத்த மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்ததில் இரண்டு நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. 

நேற்று ஈரோட்டை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஈரோட்டை சேர்ந்த மேலும் 2 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போதுவரை 5 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. 

சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 நபர்களில் 5 நபர்களுக்கு கரோனா வைரஸ்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள 23 நபர்கள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது தற்காலிகமாக கரோனா சிகிச்சை மட்டுமே அளிக்கும் வகையில் 300 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 

மேலும் ஈரோடு அரசு மருத்துவமனையில் 8, பவானி அரசு மருத்துவமனையில் 10, அந்தியூர் அரசு மருத்துவமனையில் 6, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 4, கோபி அரசு மருத்துவமனையில் 4, ஈரோடு கே.எம்.சி.எச். மருத்துவமனையில் 5, லோட்டஸ் மருத்துவமனையில் 5, ஆஸ்ரம் பள்ளியில் 17 படுக்கைகள் என 363 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

இதனால் பொதுமக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. கரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கைகளை நன்கு கழுவ வேண்டும், ஒருவருக்கு ஒருவர் 3 அடி சமூக இடைவெளியினை விட்டு செல்ல வேண்டும். தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. கரோனா வைரஸ் குறித்து சமூகவலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.