காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போடியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் வெறிச்செயல்: மூதாட்டியின் கழுத்தை கடித்ததால் பரபரப்பு

போடியில், வெள்ளிக்கிழமை, இலங்கையிலிருந்து போடிக்கு வந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் சாலையில் ஓடிச் சென்று மூதாட்டியின் கழுத்தை கடித்ததில் மூதாட்டி காயமடைந்தார்.

News image
Updated On :27 மார்ச் 2020, 4:28 pm

DIN

போடியில், வெள்ளிக்கிழமை, இலங்கையிலிருந்து போடிக்கு வந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் சாலையில் ஓடிச் சென்று மூதாட்டியின் கழுத்தை கடித்ததில் மூதாட்டி காயமடைந்தார். பின்னர் மயங்கிய இளைஞரும், மூதாட்டியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தேனி மாவட்டம் போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமநாதன் மகன் மணிகண்டன் (34).  இவர் இலங்கைக்கு ஜவுளி வியாபாரம் சென்றவர் மார்ச் 21 ஆம் தேதி ஊருக்கு திரும்பினார். வெளிநாட்டிலிருந்து வந்ததால் இவர் சுகாதாரத் துறையினரால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வந்தார். தனிமைப்படுத்தப்பட்டதற்கான குறியீடுகளும் இடப்பட்டுள்ளது.

இவருக்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து  ஆலோசனை வழங்கி வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் வீட்டிலேயே முடங்கியிருந்த நிலையில் திடீரென வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து  தனது ஆடைகளை களைந்து  நிர்வாணமாக சாலையில் ஓடியுள்ளார். அருகில் உள்ள பக்தசேவா தெருவிற்குள் ஓடிய அவர் வீட்டின் முன் படுத்திருந்த  நாச்சியம்மாள் (90) என்ற மூதாட்டியின் கழுத்தை கடித்துள்ளார். 

மூதாட்டியின்  அலறலை கேட்ட  பொதுமக்கள் இளைஞரிடமிருந்து மூதாட்டியை மீட்க முயன்று  முடியாததால் அவரை கைகளால் தாக்கி மீட்டுள்ளனர். இளைஞர் கடித்ததில்  மூதாட்டியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.  இதனையடுத்து மூதாட்டி 108 ஆம்புலன்ஸ்  மூலம்  தேனி மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பொதுமக்கள் மணிகண்டனை பிடித்து  வைத்துவிட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீஸார் மணிகண்டனைமீட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டவர் என்பதால் போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போடி டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.