இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சமூக தனித்திருத்தல் சிறை வாசமல்ல: தலைமை நீதிபதி கடிதம்

சமூக தனித்திருத்தல் சிறை வாசம் அல்ல. கரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 மார்ச் 2020, 10:33 am

DIN

சமூக தனித்திருத்தல் சிறை வாசம் அல்ல. கரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்,
அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கையை போராடி மீட்க வேண்டும் என கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி,  நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காமல், நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என கேட்க வேண்டும் என்கிற கூறியுள்ளார். 

கரோனா அச்சுறத்தலில் இருந்து மீண்டு வர நாம் உறுதியேற்போம்.  கனவில் கூட காண முடியாத சவாலான நிலையை நாம் தற்போது எதிர்கொண்டு இருக்கிறோம்.இதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.மேலும், அச்சமூட்டும்  இந்த அசாதரண நிலையும் சூழலும்  நாளை மீண்டும் ஏற்படும் என்பதை உணர்ந்து,  நமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துகொள்ளும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

சமூக தனித்திருத்தலை வெறுமனே பிறருக்கு கற்பிக்காமல் அனைவரும் உண்மையாக கடைபிடிக்க வேண்டும் .சமூகத் தனித்திருத்தல் கையாள்வது கடினமாக இருந்தாலும், மற்றவர்களின் நலனுக்காக அதனை கடைபிடிக்க வேண்டும். மத்திய அரசின் சமுக தனித்திருத்தல் உத்தரவு, சிறை வாசம் என்றோ கூண்டில் அடைக்கப்படுவதாகவோ கருதாமல், கரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என எண்ண வேண்டும் என அந்த கடிதத்தில் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.