இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஈரோட்டில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 1,696 ஆக உயர்வு

ஈரோட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 1,696 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2020, 12:15 pm

DIN

ஈரோட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 1,696 ஆக உயர்ந்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 5 பேர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் அவர்கள் வந்து சென்ற ஈரோடு கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் உள்ள வீடுகள், பள்ளிவாசல் போன்ற இடங்களில் உள்ளவர்கள் 1,190 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். 

ஈரோட்டை சேர்ந்த 10 பேர் மற்றும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 15 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் மேலும் ஒருவருக்கு வியாழக்கிழமை தொற்று உறுதியாகிய நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் இருவருக்கு தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 15 பேரில் 5 பேருக்கு கரோனா உறுதியானது. மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என 58 பேர் தனிமையாக, சிகிச்சை வழங்கப்படுகிறது.

அதுபோல் ஈரோடு கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் வீடுகளில் பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,696 என உயர்ந்துள்ளது.
மேலும் கொடுமுடி பகுதியில் 132 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.