திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பழைய பேருந்து நிலையத்துக்கு காய்கறி சந்தை சனிக்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தையினை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொடர்பான அனைத்து நடவடிக்ககைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் செயல்படும் உழவர் சந்தை பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில தற்காலிகமாக காய்கறி சந்தைகள் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளது.