ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏழு பேர் விடுதலை: ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி

7 போ் விடுதலை தொடா்பாக தமிழக ஆளுநர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :3 நவம்பர் 2020, 11:12 am

DIN

முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடா்பாக தமிழக ஆளுநர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், சுமார் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், 7 பேரின் விடுதலை தொடா்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை. 

இந்நிலையில், தன் மீதான தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்றது. 

இதில் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வதில் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதால் நாங்கள் நீதிமன்றங்களை நாடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதையடுத்து நீதிபதிகள், ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை தொடா்பாக தமிழக ஆளுநர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காதது அதிருப்தியை அளிப்பதாக கூறியுள்ளனர். மேலும், விரைவில் இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.