இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திண்டிவனம் அருகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு சென்ற கார் திண்டிவனம் அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :3 நவம்பர் 2020, 5:13 pm

DIN


கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு சென்ற கார் திண்டிவனம் அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் ஷேக் இப்ராகிம் (30). இவர் சென்னையிலிருந்து உறவினர் திருமணத்திற்காக ஸ்கார்பியோ காரில் கோயம்புத்தூருக்கு சென்றுள்ளார். பின்னர் திருமண நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். 

காரை ஷேக் இப்ராஹிம் ஓட்டி வந்தார். இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 9 பேர் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு அருகே சின்ன நெற்குணம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது காரின் இன்ஜின் பகுதியில் இருந்து அதிகளவில் புகை வந்ததால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினர்.

பின்னர், சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 

அருகிலிருந்தவர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்தது.

இந்த விபத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.