ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருத்துவக் கல்வியில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கூடுதல் இடம் ஒதுக்கினால் என்ன? நீதிமன்றம்

மருத்துவக் கல்வியில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கினால் என்ன? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
மருத்துவக் கல்வியில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கூடுதல் இடம் ஒதுக்கினால் என்ன? நீதிமன்றம்
Updated On :7 நவம்பர் 2020, 10:23 am

DIN


மதுரை: மருத்துவக் கல்வியில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கினால் என்ன? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவக் கல்வியில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி குறளரசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இன்று நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை ராணுவ வீரர்களின் வாரிகளுக்கு எத்தனை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன?  மருத்துவக் கல்வியில் சேர முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர். ராணுவ வீரர்களின் வாரிசுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது, மருத்துவ மாணவா் சோ்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்திருந்தது.

முன்னதாக, தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயா்நீதிமன்ற அமா்வு தடைவிதித்தது.

இந்தத் தடையை நீக்கக்கோரி ராணுவ வீரா்களின் வாரிசுகள் பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நாட்டில் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம் என்றால் அதற்கு எல்லையில் உள்ள வீரா்கள் தான் காரணம். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் வீரா்களின் வாரிசுகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டாமா? பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவா் சோ்க்கையில் உரிய இடஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இடஒதுக்கீடும் தேவை இல்லை.

எனவே பணியிலுள்ள ராணுவவீரா்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.