ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேல் யாத்திரை வழக்கு நவ.10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வேல் யாத்திரை தொடர்பான பாஜக வழக்கு நவ.10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :7 நவம்பர் 2020, 3:55 pm

DIN

வேல் யாத்திரை தொடர்பான பாஜக வழக்கு நவ.10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூா் வரை வேல் யாத்திரை நடத்த பாஜக முடிவு செய்தது. இதை எதிா்த்து உயா் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்தது. இதைக் கண்டித்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரியும் தமிழகத்தில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக டிஜிபியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனுத் தாக்கல் செய்தது. 

இந்த அவரச மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மாலை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு மற்றும் பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, முருகனின் அறுபடை வீடுகளுககு செல்வதுதான் வேல் யாத்திரை என்றால், முருகனின் கோயில்களே இல்லாத வழியில் யாத்திரை திட்டமிட்டுள்ளது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

பின்னர் வேல் யாத்திரை குறித்த முழு விவரங்களுடன் கூடிய புதிய மனுவை டிஜிபியிடம் அளிக்கவும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் பாஜக தரப்பினருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இந்த வழக்கு நவ.10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.