சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மதுரை ஜவுளிக்கடையில் தீ: 2 தீயணைப்பு வீரர்கள் பலி

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:52 pm

DIN


மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

மதுரை தெற்கு மாசி வீதியில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. 

உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியைத் தொடங்கினர். 

தீ மளமளவென கடையின் அனைத்து பகுதிக்கும் பரவியதால் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு வீரர்கள் மிகவும் போராடி வந்தனர். 

இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் 4 தீயணைப்பு வீரர்கள் சிக்கினர். 

இதில், படுகாயமடைந்த சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

நள்ளிரவு ஏற்பட்ட தீ, தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.