இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போடி, தேவாரம் பகுதியில் கனமழை: கொட்டகுடி ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

போடி, தேவாரம் பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருவதால் கொட்டகுடி ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News image
போடி பிள்ளையார் கோவில் தடுப்பணையில் அருவி போல் ஆர்ப்பரித்த தண்ணீர் .
Updated On :19 நவம்பர் 2020, 3:47 am

DIN



போடி:   போடி, தேவாரம் பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருவதால் கொட்டகுடி ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

போடி பகுதியில் கடந்த சில தினங்களாகவே பரவலான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பகலில் மழை இல்லாமல் இருந்தது. புதன்கிழமை இரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. வியாழக்கிழமை காலை கனமழை பெய்தது.

Story image

தே.ரெங்கநாதபுரம் கன்னிமார் ஓடையில் அதிகரித்த தண்ணீர் .

தொடர் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிள்ளையார் கோவில் தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. குரங்கணி மலை பகுதி, போடி மெட்டு மலைச்சாலை உள்ளிட்ட மலை பகுதியிலும் கன மழை பெய்தது.

Story image

தேவாரம் பகுதியில் பெய்த கனமழை

தேவாரம் மற்றும் சுற்று கிராமங்களிலும் கனமழையால் பிரம்பு வெட்டி கடை, தே.ரெங்கநாதபுரம் கன்னிமார் ஓடை உள்ளிட்ட ஓடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கண்மாய், குளங்களும் நிரம்ப தொடங்கி உள்ளன.

வியாழக்கிழமை காலை முதல் பெய்து வரும் கனமழையால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பணிகளுக்கு செல்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.