விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாசன வாய்க்காலில் நீர் செல்வதில் சிக்கல்: ஆகாயத் தாமரைகளை அகற்றிய விவசாயிகள்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள தடுப்பணையிலிருந்து உத்தமபாளையம் பாசனத்திற்குச் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால், விவசாயிகள் தாங்களாகவே ஆகாயத் தாமரைகளை வியாழக்கிழமை அகற்றினர்.

News image

ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியில் விவசாயிகள்

Updated On :26 நவம்பர் 2020, 5:54 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள தடுப்பணையிலிருந்து உத்தமபாளையம் பாசனத்திற்குச் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால், விவசாயிகள் தாங்களாகவே ஆகாயத் தாமரைகளை வியாழக்கிழமை அகற்றினர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதி நன்செய் பாசனப் பரப்பிற்கு கம்பம் அருகே உள்ள தொட்டம்மன் துறையிலிருந்து அம்மாபட்டி வரை 17 கிலோ மீட்டர் நீளமுள்ள உத்தமுத்து கால்வாய் செல்கிறது. இதன்மூலம் சுமார் 1,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகின்ற நிலையில்,  உத்தமுத்து கால்வாயில் ஆகாயத் தாமரைகள், முட்செடிகள் நிறைந்து கால்வாயில் தண்ணீர் செல்லாமல் தேங்கி நின்றது. இதனால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் போதுமான அளவு கிடைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

இதுபற்றி பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கேஜ் வீல் பொருத்திய நான்கு டிராக்டர்களை கால்வாயில் இறக்கி இருபுறமும் உள்ள செடி கொடிகளை அகற்றினர். கால்வாய் நீரின் மேற்பரப்பில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளையும் அகற்றினர். வியாழக்கிழமை இரண்டாவது நாளாக ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

மேலும் இதுகுறித்து உத்தமபாளையம் பாசன பரவு விவசாய சங்க நிர்வாகி முகமது ராவுத்தர் கூறுகையில், உத்தமுத்து கால்வாயில் வரும் தண்ணீர் பாசனம் நிலங்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததே இதற்கு காரணம். விவசாயிகளான நாங்களே சொந்த செலவில் கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்து வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.