மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பூரில் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டுக் கொலை

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :4 அக்டோபர் 2020, 7:47 am

DIN


திருப்பூர்: திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

திருப்பூர் கோல்டன் நகர் 2 ஆவது வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(36), பெயிண்டிங் தொழிலாளியான இவர் தனது தாய் ஜெயந்தியுடன் வசித்து வந்தார். 

இந்த நிலையில், சுரேஷ்குமாருக்கும், அவரது வீட்டின் அருகில் குடியிருந்து வரும் செல்வம்(38) என்பவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே, சுரேஷ்குமார் சனிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு அரைகுறை ஆடைகளுடன் வீட்டில் அருகில் படுத்துக் கிடந்துள்ளார். அப்போது அங்கு வந்த செல்வம், சுரேஷ்குமாரை எச்சரித்துள்ளார். 

ஆனால் மதுபோதையில் இருந்த சுரேஷ்குமார் தகாதவார்த்தையால் அவரைத் திட்டியதாகத் தெரிகிறது. இதனால ஆத்திமடைந்த செல்வம் அருகில் இருந்த கல்லைத்தூக்கி சுரேஷ்குமார் மீது போட்டதாகக் கூறப்படுகிறது. 

இதில்,உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுரேஷ்குமாரை திருப்பூர் வடக்கு காவல் துறையினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்தாகத் தெரிவித்தனர். 

இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, செல்வத்தைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.