மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அக். 31 வரை மெரீனாவில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது: சென்னை மாநகராட்சி

கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரீனா கடற்கரையில் அக்டோபர் 31-ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image
அக். 31 வரை மெரீனாவில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது: சென்னை மாநகராட்சி
Updated On :5 அக்டோபர் 2020, 8:55 am

DIN

சென்னை: பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மெரீனா கடற்கரையில் வரும் அக்டோபர் 31 -ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர்  மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர்- லூப் சாலையை புணரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர், மெரீனா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தப்புள்ளி இரண்டு முறை திறக்கப்படவில்லை. வரும் நவம்பர் 9-ஆம் தேதி இந்த ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும். 3 நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளனர். பொதுமக்களுக்கு மெரீனாவை  திறப்பதை பொருத்தவரை, தமிழகத்தில் பொது முடக்கத்தை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி  வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால்  பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தள்ளுவண்டி கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரீனா கடற்கரையில்  பொதுமக்களை அனுமதிப்பது உள்ளிட்டவை குறித்து வரும் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு  விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.