அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை 2020 குறித்து ஆய்வு பணியை கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்து வருகிறார்.

News image
ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ்
Updated On :7 அக்டோபர் 2020, 6:49 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை 2020 குறித்து ஆய்வு பணியை கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி, அவர் பர்கூர் பேரூராட்சியில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும், பர்கூர் பராமரிப்பு மையத்தையும் ஆய்வு செய்கிறார்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி அணையில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை வெள்ள தடுப்பு பணிகளையும், அவர் பார்வையிடுகிறார். 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதியம் 2 மணி அளவில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பி ஜெயச்சந்திர பானுரெட்டி தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.